Monday, October 15, 2007

நின் நிலை கண்டு கறைவதை
அறிவாயோ தோழி
உன் துனைக்காக ஆண்டவனை
அழைக்கின்றேன் தோழி
உயிர் காக்கும் நட்பினை
மறப்பேனோ தோழி
உன் வலிக்கான மருந்தினை
தந்துவிட்டேன் தோழி
ஆழ்மனதின் பாரத்தை என்னிடம்
விடு தோழி
கனம் தாழ்ந்த மனதோடு
இமை சேர்ப்பாய் தோழி...
நட்பாக வந்தாய் - மென் மனதை
என்னுடன் பகிற்ந்தாய்
நிலைபெயர்ந்து சென்றாய் - அடி மனதில்
முள்ளாய் வலி தந்தாய்...

உனக்காக...

உன் நினைவாக ஏற்றதை உனக்காக
துறக்கிறேன்
சிறு தூறலோடு என் வாழ்வை கடந்த
மேகக் கூட்டத்தில்
மற்றும் ஓர் முகிலையும் இனைக்கிறேன்...